Friday, August 29, 2008

என்ன என் கையில் ?இரண்டாம் பாகம்

அஹிம்சை என் கையில்
ஆளை மிரட்டும்
ஹிம்சை என் கையில்
இன்பம் என் கையில்
அதை விரட்டும்
துன்பம் என் கையில்
வாழ்வு என் கையில்
அதில் ஒழிந்து
மருட்டும்
சாவும் சில நேரம் என் கையில்
அடுதவனுக்குதவும்
நெஞ்சம் என் கையில்
பிறரை கண்டு
புழுங்கும்
வஞ்சம்
என் கையில்
என்ன என் கையில்
ஜகத்தை
ஜெயிக்கும்
இகத்தை
அடக்கும்
அகத்தை
மடக்கும்
மந்திரம்
என் கையில்
என்ன என் கையில் ?
இந்த வாழ்வு
என் கையில்
என்கையில் என்ன
இல்லை என்கையில் ?

Thursday, August 28, 2008

என்ன என் கையில் ?




என்ன என் கையில் ?


என்ன என் கையில் ...?

ஒவ்வொரு சிசுவும்

கருவறை தாண்டும்

அத்தனை முறையும்

கை மூடிப் பிறக்கும் !

என்ன அதன் கையில்

எதை சொல்ல இத்தனை பூடகம் ?

நாமும் ஒருநாள் சிசுவாய்ப்

பிறந்தோம் பின்

வளர்ந்து வளர்ந்தே

ஆணென்றும்

பெண்ணென்றும்

பேதம் பிரிந்தோம்

இன்று

வாதம் புரிகிறோம் ...

பத்து விரல்களும்

பாடம் சொல்ல

ஏட்டுச் சுவை தனை

ஏற்றுப் பயின்றோம்

கல் தோன்றி மண் தோன்றக்

காலத்து முன் தோன்றிய

மூத்தகுடியின்

முதல் மகனும்

சின்னஞ்சிறு

சிசு வாய் பிறக்கும் நாளில்

கை இறுக்கி மூடி

உயிரொளி

எழுப்பியே

உலகம் கண்டிருப்பான் ...

என்ன அவன் கையில்

இந்த உலகம் அவன் கையிலோ ?

இந்த ஜனனம்

அவன் கையிலோ ?

இனி மரணம் கூட அவன் கையிலோ ?

என்ன என் கையில் ?

என்ன உன் கையில் ?

என்ன அவன் கையில் ?

எல்லாமே

இதற்கு

முன்பும் சரி

இனி எப்போதும் சரி

எல்லாம் நம் கையில் தான்

என

உணர்ந்தே தான்

கை மூடி கண் மூடிப்

பிறந்தோமோ ?

எப்படி இருப்பினும் ...

உலகம் நம் கையில்

என உயர்ந்த குரலில்

பாடிடுவோம்

இந்தக் கை ...அந்தக் கை

தோற்றவன் கை

ஜெயித்தவன் கை

உயர்ந்தவன் கை

தாழ்ந்தவன் கை

மூத்தவன்

கை

இளையவன் கை

ஆணின் கை

பெண்ணின் கை

கறுப்புக் கை

வெள்ளைக் கை

மாநிறத்து வண்ணக் கை

பழுப்புக் கை

பகைவன் கை

எல்லாக் கையும் ஒன்றாய்

இணைந்தால்

புதிய உலகம்

படைத்திடலாம்

புத்தம் புதிதாய்

வாழ்ந்திடலாம்

என்ன நம் கையில்

எல்லாமே நம் கையில்

கயல்







Saturday, August 23, 2008

அதென்னவோ ...!!!

அதென்னவோ வயது ஏற ...ஏறத்தான் ஞாபகசக்தி கொஞ்சம் குறையும் என்பார்கள் ! எனக்கென்னவோ இப்போது தான் கூடிக் கொண்டே போவதைபோல ஒரு சின்ன பிரம்மை ...
ஏனென்றால் சமீப காலங்களில் தான் சுருங்கச் சொன்னால் ஆறு மாத காலமாக என் மகள் எல் கே ஜி செல்லத் தொடங்கிய நாட்களில் இருந்து அவளுடன் சேர்ந்து நானும் மறுபடி கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன் . விஷயம் ஒன்றும் பெரிதாக இல்லை எனக்கு பத்தாம் வகுப்பு வரை கை வரப் பெறாத ஆங்கிலம் இன்று அவள் தயவால் சட்டெனப் புரிகிறது ...நான் முதுகலை பயிலும் பயிலும்போது மட்டுமே அறிய முடிந்த சில கடினமான ஆங்கில வார்த்தைகளை இப்போது என் மகளும் அவள் வகுப்பு நண்பர்களும் சரளமாக பேசிக் கொள்வதைப் பார்க்கும் போதுசந்தோஷமாக இருந்தாலும் சின்னதாக ஏக்கமும் வரத்தான் செய்கிறது ...என்ன செய்ய ? கொசுவுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் என்று ஒரு நாள் முழுக்க ஆங்கில அகராதியில் தேடி விட்டு கண்டு பிடிக்க முடியாமல் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஒத்திப் போட்ட எனது நான்காம் வகுப்பு ஆசிரியையை நான் எந்த விதத்திலும் குற்றம் சொல்ல முடியாதே ...!
எட்டாம் வகுப்பு முடித்தவுடன் அந்தக் காலத்தில் ஆசிரியப் பயிற்சி பெற்று இளம் வயதிலேயே நடுநிலைப் பள்ளிகூட ஆசிரியை ஆகி விட்ட அவரை என்ன தான் சொல்ல முடியும் ?
இன்றைய நாட்களைப் போல அன்று இடை நிலை ஆசிரியர்களுக்கு ஆங்கில அறிவு தேவைப் பட்டிருக்கவில்லையோ என்னவோ ? எது எப்படியோ அன்று அந்தப் பள்ளியில் பயின்று விட்டு வந்து தான் இன்று என் மகளுக்கு நான் பாடம் சொல்லித் தருகிறேன் ...இத்த்டனை நாட்களுக்குப் பிறகு நான் கற்றுக்கொண்ட ஒரே ஒரு உபயோகமான விஷயம் ;
முயற்சி என்ற ஒன்று மட்டும் எந்தப் பள்ளியில் படித்தாலும் நிச்சயமாய் கை விடப் படாதிருக்க வேண்டும் என்பதே ...
பிறகென்ன ?
அன்று இல்லாத வழக்கமாய் நான் இன்று தானே ஆங்கில அகராதியை முழுமையாய் தினம் ஒரு முறையேனும் புரட்டிப் பார்க்க வேணும் என்று அவஷியம் ஏற்பட்டிருக்கிறது !
இது நல்ல முன்னேற்றமோ இல்லையோ ?
என் மகளிடம் அவமானப் பட முடியாது ...பிறகு அது அவளது வகுப்பாசிரியை ...தலைமை ஆசிரியை ...
அவளது நண்பர்கள் ...நண்பர்களின் பெற்றோர்கள் எனத் தொடர்ந்து பிறகு என்னையே எனக்கு வெறுக்கச் செய்து விடும் ...இதை விட பேசாமல் எதையாவது கற்றுக் கொள்வது மேல் அல்லவா?
அப்படித் தான் நான் தொடர்ந்து முயச்சியோடு பயிற்ச்சி எடுத்துக் கொள்வதை ஒரு பழக்கமாக்கி விட்டேன் ;
சரி...சரி .................................
இதுவரை நான் என்னைப் பற்றி சொல்லிக் கொண்டு வந்தேன் என்று நினைத்தீர்களா ?
அது தான் இல்லை !!!
நான் எங்களைப் பற்றி சொன்னேன் .
நாங்கள் யார் ?
பெற்றோர் ...
பெற்றோர் ....
பெற்றோர் ...
நாங்களே தான் அய்யா ...
ஆங்கில வழிக் கல்வி பயிலும் நடுத்தரக் குடும்பத்துக் குழந்தைகளின் பெற்றோர் .

ஜோ வின் குட்டி பூ

பூக்கள் எப்போதுமே சிரித்துக் கொண்டே தான் இருக்குமோ ...
சின்ன சின்னப் பூவே
நீ கண்ணால் பார்த்தல் போதும்
தொட்டுத் தொட்டுப் பேச
என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால்
பட்ட மரம் பூ மலரும்
பாறையிலும் நீர் சுரக்கும்
இதெல்லாம் நிஜமோ என்னவோ ? பார்த்ததும் அந்த சிரிப்பு நம்மையும் தொற்றிக் கொள்வது என்னவோ உண்மை தான் .

Wednesday, August 20, 2008

லக்ஷ்மி கடாட்சம் (தேவன்)

ஒரு கல்லூரி விடுமுறை நாளில் தான் நான் பழைய எழுத்தாளர் தேவனின் "லக்ஷ்மி கடாட்சம் " நாவலை வாஷித்து முடித்தேன் . கல்கியின் "பொன்னியின் செல்வனை " போல மூன்று மிகப் பெரிய புத்தகங்கள்
முதலில் கொஞ்சம் போர் அடித்தாலும் போகப் போக கதையின் போக்கு என்னை ஈர்த்துக் கொண்டது இரெண்டே நாட்களில் முழு நாவலையும் முடித்து விட்டேன் .
கதை ஒன்றும் புதுமையானதில்லை ...
ஆனாலும் கதை சொல்லும் நேர்த்தி இருக்கிறதே அதில் இருக்கிறது ஒவ்வொரு கதாசிரியரின் சாமர்த்தியம் ; எனக்கு தேவனின் எழுத்து நடை ரொம்பப் பிடித்து போனது எதனாலோ ? ரொம்பப் பேருக்கு பிடிக்குமோ என்னவோ தெரியவில்லை !!! எனக்கு அவரின் பிராமணத் தமிழில் எதோ வசீகரம் தென்பட்டு கவர்ந்து கொண்டது .
சரி நாவலுக்கு வருவோம் .
இந்தக் கதையின் நாயகி "காந்தா மணி "
நாயகன் "துரை சாமி "
அந்தக் கால பழைய பட "ரங்கா ராவ் " போல இங்கேயும் ஒரு charactor உண்டு அவர் " கங்கா தர முதலியார் "
அப்புறம் வில்லனின் நல்ல நண்பர் "சிங்காரம் "
கதைச்சுருக்கம் :-
காந்தாமணி தனது சிற்றன்னையின் கொடுமையிலும் நற்பன்புகளோடு வளர்ந்து வந்த ஒரு நல்ல பெண்மணி . அவளது வாழ்வைப் பாழக்க நினைக்கும் சிற்றன்னையிடமிருந்து முன்னெப்போதோ ஒருமுறை பால்ய காலத்தில் உடன் விளையாடிய நண்பனான துரைசாமியின் மீது ஏற்பட்ட பரிவு கலந்த காதலால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தனியே வாழத்தொடங்குகின்றனர் .
அப்போது தான் சித்தியின் மூலம் வில்லன் (மன்னிக்கவும் ... பெயர் மறந்து விட்டது ) kandhamani , துரைசாமியின் வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்து ஒரு பெண் குழந்தை ( மீனாக்ஷி ) பிறந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிய நேரிடுகிறது ...
துரைசாமி பணப் பற்றாக்குறையால் பர்மா செல்கிறான் , அங்கே " லக்ஷ்மி கடாட்சத்தால் " ஸ்ரீமான் கங்காதர முதலியார் எனும் பெரிய மனிதரை சந்திக்கிறான் , அவரது தயவால் வாழ்கையிலும் முன்னேறுகிறான் ..பலன் என்ன ?
பணம் நிறைய சேர்த்துக் கொள்ள முடிந்தாலும் குடும்பம் இந்தியாவில் என்ன கதி ஆனது எனத்தெரியாமல் கலங்குகிறான் ...இப்போதைப் போல அன்று செல்போன் வசதிகளோ ...இன்டர்நெட் வசதிகளோ கிடையாதே !!!
எனென்றால் கதை நிகழும் காலகட்டம் விடுதலைக்கு முன்பு என நினைக்கிறேன் .
இப்படிச் செல்லும் கதையின் போக்கில் துரைசாமி பல்வேறு இன்னல்களையும் தாண்டி மறுபடி தன் குடும்பத்தை அடைந்து சந்தோஷிக்க நினைக்கும்போது மறுபடி வில்லன் வந்து தன் வேலையைக் கட்டுகிறான் ...பலன்
துரைசாமி தன் மனைவி காந்தமனியை சந்தேகிக்க தொடங்குகிறான் ;
கணவன் தன்னோடு இல்லாத காலத்தில் காந்தாமணி பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கிறாள் .
பணத்தின் வழியாக அவளை அடைய நினைக்கும் வில்லன் அது முடியாமல் போகவே wherever she goes
இடங்களில் எல்லாம் அவளை வாழ விடாமல் தொடர்ந்து துயரங்களுக்கு உட்படுத்துகிறான் .
எல்லாம் முடிந்து இனியாவது நல்வாழ்க்கை கிட்டும் என ஆறுதலடைய விடாமல் கடைசி முயற்சியாக
காந்தாமணி யின் நடத்தை பற்றி அவளது கணவனிடம் இல்லாத பொல்லாத நடக்காத விசயங்களைக் கூறி அவனை சஞ்சலத்திற்கு உட்படுத்துகிறான் வில்லன் .
துரைசாமியும் he also a good human ...இங்கே காந்தாமணி கணவன் தன்னை விட்டுப் பிரிந்த பின் வயிற்றுப் பாட்டிற்காக தன் குழந்தை மீனாக்ஷியின் நலனுக்காகவும் தனக்கு இயல்பாகவே she has good voice சாரீர (குரல் ) வளத்தால் பாடகியாகி விடுகிறாள் ;
நல்ல நல்ல தெய்வீக பாடல்கள் இவள் பாடி வெளிவந்தவை எல்லாம் நன்றாக விற்பனை ஆனதால் peak of her feild போகிறாள் காந்தாமணி ;
இந்த நேரத்தில் மறுபடி ஒன்று சேர முடியாமல் வில்லன் இருவர் மனதையும் நஞ்சாக்கி விட முயல்கிறான் .
இறுதியில் கங்காதர முதலியார் ,சிங்காரம் போன்ற நல்ல மனம் படைத்தவர்களின் உபாதேசத்தின் பின் தம்பதிகள் ஒன்று சேர்வதே "லக்ஷ்மி கடாட்சம் " நாவல் .
இதில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் நாயகி காந்தமனியை விடவும் கங்காதர முதலியார் தான் ;
அவரது கொள்கை சரியோ...தவறோ ? பணம் பெட்டியில் நிரம்ப நிரம்ப அதை அள்ளி அள்ளி வெளியில் விட்டுவிட வேண்டும் அப்பா ...அது வியாபார நிமித்தமாகவோ ...பிறருக்கு உதவும் நிமித்தமாகவோ இருக்கலாம் ,பணம் பெட்டியில் வெறுமே பொங்கி வழிய...வழிய உள்ளே வைத்துப் பூடவே கூடாது .
பெட்டி காலியானால் தான் திரும்பத் திரும்ப நிரம்பும் ...நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும் " இதே அவர் தன்னை அண்டி வருவோருக்கு சொல்லும் உபதேசம் .
நன்றாகத்தான் போகிறது நாவலின் ஓட்டம் !
உங்களுக்கும் இஷ்டமிருந்தால் ஒரு முறை வஷித்து தான் பார்க்கலாமே !!!

Saturday, August 16, 2008

என்ன பேசலாம் ?
எனக்கு பேச பிடிக்கும் ...அதை விட யாராவது அர்த்தத்தோடு பேசினால் கேட்பதற்கும் பிடிக்கும் .
பிறகு அதை பற்றி சிந்திக்கவும் பிடிக்கும் ...பேச விஷயமா இல்லை இந்த உலகத்தில் ...!!!
ஒரு மாலை நேரம் ...!
இப்படி கூட கற்பனை செய்து கொள்ளலாம் ...
ஒரு மாலை இளவெயில் நேரம் ...
அழகான இலையுதிர்காலம்
பேசி சிரிக்க ஒத்த நண்பர் கூட்டம் இருந்தால் எல்லா காலங்களும் அழகான காலங்களே !!!
வசந்த காலங்களே ...;
அப்படி பட்ட அருமையான ஒரு நேரத்தை கற்பனை செய்து கொண்டால் நாம் பேசுவதெல்லாம் அழகான கதைகளாகி விடலாம் ஒரு நாள் ...!!!
பேசலாமா ...
நேரம் தொடங்குகிறது ...
இந்த நிமிடத்திலிருந்தே...!
கயல்